இலங்கை என்றால் இந்த உலகமே அறிவது வடகிழக்கு யுத்தத்தையும் யாழ்ப்பாணத்தவரின் வேறுபட்ட தமிழையும் தொனியையும் தான். அதையும் கடந்து இந்தியத்தமிழர் எனும் பெயரில் மலைகளுக்குள் சிக்குண்ட மலையகத்தமிழரெனும் இந்திய வம்சாவளித் தமிழரின் வரலாற்றை யாரும் திரும்பிப் பார்க்க நினைப்பதில்லை என்பது நிதர்சனம். மலையகத்தமிழர் வரலாற்றை ஓரிரு வரிகளில் வரையறுத்துவிட இயலாது. அதன் ஆழமும் செறிவும் அளப்பரியது.
இந்த உலகமே அதிகம் பேசியது வடகிழக்குத்தமிழரைப் பற்றித்தான். ஈழம் என்பது இலங்கை என அனைவராலும் கருதப்பட்டாலும் ஈழம் என்பது இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தையே குறிக்கும். ஈழத்தமிழர் எனும் வரையறைக்குள் இவர்கள் ஒருபோதும் அடங்குவதில்லை. இவர்கள் இலங்கைத் தமிழரா என்றால் அதுவும் இல்லை. இவர்களது பிறப்புச்சான்றிதழ்களில் ඉන්දියානු දෙමළ (இந்தியத்தமிழர்) என்று தெளிவாக அச்சுபொறிக்கப்பட்டுள்ளது! இப்போதுதான் இவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத்தொழிலாளர்களும், அவர்களது வம்சாவளியினரும் “மலையகத்தமிழர்” எனும் பகுப்புக்குள் உள்ளடக்கப்பட்டாலும் இவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் என்பதனால் “இந்தியத்தமிழர்” மற்றும் “இந்திய வம்சாவளித்தமிழர்” என்ற பகுப்புக்களுக்கே பொருத்தமானவர்களாவர். 1820-1840 வரையான காலப் பகுதியில் தென்னிந்தியாவில் சாதிக்கொடுமையுடன் பஞ்சமும் ஓங்கி நின்றது. மக்கள் பட்டினியால் செத்து மடிந்த இந்த அவலமான சூழ்நிலையை பிரித்தானியர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அம்மக்களைக் கூலித்தொழிலாளர்களாக இலங்கையின் கண்டி சீமைக்கு அழைத்து வந்தனர். 1815 இல் கண்டி இராஜ்ஜியத்தைக் கைப்பற்றியிருந்த பிரித்தானியரின் ஆதிக்கம் மலையகமெங்கும் தழைத்தோங்கியது. பொருளாதார மற்றும் சாதித்துவ விடுதலை பெறுவதற்காக இந்திய மக்களும் பிரித்தானியனின் பசப்பு வார்த்தைகளை நம்பி இலங்கையை வந்தடைந்தனர். “தேயிலைக்கடியில் தேங்காயும் மாசியும் கிடைக்கும்” என்று நம்பி "கூலி" என்ற பெயருடன் வந்த மக்களே இவர்கள். இது இடம்பெயர்வு என்பதைக்காட்டிலும் இது ஒரு வகையான புலம்பெயர்வேயாகும். இன்று வரை ஈழத்தமிழரின் புலம்பெயர்வைப் பற்றிப் பேசும் சர்வதேசம் இந்த புலம்பெயர்வைப் புறக்கணித்தது என்னவோ உண்மைதான்.
அங்கிருந்து வந்த மக்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, நுவரெலியா, புஸ்ஸல்லாவை போன்ற பல்வேறு இடங்களிலும் தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டதோடு அடர்ந்த வனங்களையும் பெருந்தோட்டங்களாக மாற்றினர். சுரங்கங்களைக்குடைந்து ரயில் பாதைகளை உருவாக்கினர். மலைகளைக்குடைந்து சாலைகளை உருவாக்கினர். மழையிலும் வெயிலிலும் புழுப்பூச்சிக்களுக்கு கடியுண்டு பசியிலும் பட்டினியிலும் நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் வலுக்கட்டாயத்தில் உழைத்தார்கள். மலையகத்தமிழர் எனக்கூறப்படும் இவர்களே இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச்சுமந்தனர். பிரித்தானிய முதலாளிமாரின் கீழ் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்கள் தான். ஆனால், இலங்கையர்கள் இவர்களை கள்ளத்தோணி, வடக்கத்தியான், தோட்டக்காட்டான், பறத்தமிழன் என்றெல்லாம் பல வசைச்சொற்களைக் கூறி இழிவுபடுத்தி, இந்திய வம்சாவளித்தமிழரை நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென எண்ணினார்கள்.
மலையகத்தமிழரின் சோக வரலாறு வெளித்தெரியாமல் புதையுண்டு போனது. இது இலங்கையர், இந்தியர் இரு தரப்பினராலும் பேசமறுக்கப்படும் சோகக்கதை. இவர்களது நடைப்பயணத்தின் போது பலர் இறந்து போயினர். தோணிகளில் அதிகம் பேரை ஏற்றிச்சென்றதால் பல பேரை கடல் காவுகொண்டது. இலங்கைக் கரையைச் சேர்வதற்கு முன்னாலேயே பலநூறு இந்தியத் தமிழர்கள் மாய்ந்து போயினர். இவர்களை அழைத்துவந்த "ஆதிலெட்சுமி" என்ற கப்பலொன்று நூற்றிருபது பேருடன் கடலில் மூழ்கிய சம்பவமும் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகிறது. வரும் வழியிலும் வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான துயரங்களை எதிர்க்கொண்டனர். இவ்வாறு துயர்சுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் மலையகத்தமிழர் என்றும் இந்திய வம்சாவளித்தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து தமிழர்களுடன் தெலுங்கர், மலையாளிகளும் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறுபான்மையினராக இருந்த காரணத்தினால் அவர்களும் தமிழ்பேசக்கற்று தமிழராகவே உருமாறினர்.
உரிமையற்று வாழ்ந்த இவர்களுக்கு 1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வழங்கப்பட்டபோதிலும் பின்னரே கொண்டுவரப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஆகிய பிரஜாவுரிமை சட்டங்களால் அவ்வுரிமையும் பறித்துக்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் இந்திய வம்சாவளித்தமிழர்கள் இந்தியாவிற்கே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒரு தொகையினர் விரும்பி வெளியேறினர். லட்சக்கணக்கானோர் வெளியேறிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலர் இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்ட அவலமும் வரலாற்றில் இருக்கிறது.
இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின் பெருமளவு இந்தியத்தமிழரை இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை அரசு முயற்சித்தது. இதன்படி 525,000 பேரை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இச்சமயம் இந்தியக்குடியுரிமை பெறுவோர், இலங்கைக்குடியுரிமை பெறுவோர், நாடற்றோர் என இவர்கள் மூன்றாகப் பாகுபடுத்தப்பட்டனர்.இதனை விரிவாக எடுத்து நோக்கின்,
1948 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானியர் வெளியேறிய பின்னர் சிங்களதேசியவாதிகள் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பியனுப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாக எதிர்த்தபோதிலும் 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி இலங்கை குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்தின் முன்னர் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவரது இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இலங்கைக் குடியுரிமைக்கு உரித்துடையவரென்று வரையறுக்கப்பட்டது. போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பலர் “நாடற்றவர்” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1958ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் பின்னரே "நாடற்றோர்" என்ற பதம் நீங்கி, தோட்டப்புற மக்களும் வாக்குரிமை பெற்று இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றனர்.
இன்னும் மலையக வரலாற்றையும் இந்திய வம்சாவளித்தமிழரின் சோகக்கதையையும் கூறமுற்படின் பலநூறு பக்கங்களில் இவர்களின் வலிகள் பதிந்துகொண்டே செல்லும். கல்லுமுள்ளாகவும் காடுமேடாகவும் குன்றும் குழியுமாக கிடந்த மலைநாட்டை தங்கள் வியர்வையால் செதுக்கி அழகிய வளமிகு பூமியென மாற்றியதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையையும் பொருளாதாரத்தையும் விருத்தி செய்து கொடுத்த எமது முன்னோர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களைக் கடந்தனர் என்பது சொல்லொணாத்துயராகும். ஆயினும், இருபத்தோராம் நூற்றாண்டில் இன்றுவரை இந்நிலைமை முற்று முழுதாக மாறவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மைதான்.
"மலையகத்தமிழ் இலக்கியம்" என்ற பரப்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய இடம்பிடித்துள்ளமை இவர்களின் வெற்றியாகும்.
இப்படிப்பட்ட இவர்களை ஏன் இந்த உலகமே மறந்து போனது! மலையக இளைஞர்கள் ஊடகத்துறைத் தொழிலுக்கு விண்ணப்பித்தால் நேர்முகத்தேர்வில் இந்தியத்தமிழ் பேசுவதால் நிராகரிக்கப்படும் கொடுமை இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. கூலிகளாக வந்தவருக்கு படிப்பெதற்கு? என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அவலமும் இவர்களின் துயரில் இழையோடத்தான் செய்கிறது. அன்று பிள்ளை பராமரிப்புக்காக இருந்த கொட்டகைகளான "பிள்ளைக்காம்பராக்கள்" தான் இன்றைய தோட்டப்புற பாடசாலைகள். இலங்கையின் கல்வி இலவசக்கல்விமுறை எனினும் அது சமத்துவக்கல்வியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதற்கு இத்தோட்டப்புற பாடசாலைகளே சான்றாகும்.
மலையகத்தின் நூற்றாண்டைக் கடந்த பாடசாலைகள் என்று அவதானித்தால் நுவரெலியா திரித்துவக்கல்லூரி( சுமார் 175ஆண்டுகள்), இறக்குவானை பரியோவான் கல்லூரி(சுமார் 130ஆண்டுகள்), ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி-(மெதடிஸ்ட் கல்லூரி)(சுமார் 125 ஆண்டுகள்), நுவரெலியா சென்சேவியர் கல்லூரி(சுமார் 97 ஆண்டுகள்) ஆகிய பாடசாலைகள் இடம்பெறுகின்றன. இன்றைய மலையக பாடசாலைகள் பலரின் முயற்சியாலும் உருப்பெற்று இன்று அரசாங்க பாடசாலைகளாக பரிணமித்துள்ளன.
மலையகம் என்பது கல்விக்கு பின்நிற்கும், கல்வியில் பின்தங்கிய சமூகமென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும். நிர்வாக உள்கட்டமைப்புக்கள் மலையகக் கல்வியை வரலாற்றில் பின்தள்ளியிருக்கின்றது என்பதே நிதர்சனம். இன்றைய மலையக மக்களின் வளர்ச்சி நிச்சயம் எதிர்கால கல்வி வரலாற்றிலும் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தோட்டத்தொழிலாளர்களும், அவர்களது வம்சாவளியினரும் “மலையகத்தமிழர்” எனும் பகுப்புக்குள் உள்ளடக்கப்பட்டாலும் இவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டவர்கள் என்பதனால் “இந்தியத்தமிழர்” மற்றும் “இந்திய வம்சாவளித்தமிழர்” என்ற பகுப்புக்களுக்கே பொருத்தமானவர்களாவர். 1820-1840 வரையான காலப் பகுதியில் தென்னிந்தியாவில் சாதிக்கொடுமையுடன் பஞ்சமும் ஓங்கி நின்றது. மக்கள் பட்டினியால் செத்து மடிந்த இந்த அவலமான சூழ்நிலையை பிரித்தானியர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அம்மக்களைக் கூலித்தொழிலாளர்களாக இலங்கையின் கண்டி சீமைக்கு அழைத்து வந்தனர். 1815 இல் கண்டி இராஜ்ஜியத்தைக் கைப்பற்றியிருந்த பிரித்தானியரின் ஆதிக்கம் மலையகமெங்கும் தழைத்தோங்கியது. பொருளாதார மற்றும் சாதித்துவ விடுதலை பெறுவதற்காக இந்திய மக்களும் பிரித்தானியனின் பசப்பு வார்த்தைகளை நம்பி இலங்கையை வந்தடைந்தனர். “தேயிலைக்கடியில் தேங்காயும் மாசியும் கிடைக்கும்” என்று நம்பி "கூலி" என்ற பெயருடன் வந்த மக்களே இவர்கள். இது இடம்பெயர்வு என்பதைக்காட்டிலும் இது ஒரு வகையான புலம்பெயர்வேயாகும். இன்று வரை ஈழத்தமிழரின் புலம்பெயர்வைப் பற்றிப் பேசும் சர்வதேசம் இந்த புலம்பெயர்வைப் புறக்கணித்தது என்னவோ உண்மைதான்.
அங்கிருந்து வந்த மக்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, நுவரெலியா, புஸ்ஸல்லாவை போன்ற பல்வேறு இடங்களிலும் தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டதோடு அடர்ந்த வனங்களையும் பெருந்தோட்டங்களாக மாற்றினர். சுரங்கங்களைக்குடைந்து ரயில் பாதைகளை உருவாக்கினர். மலைகளைக்குடைந்து சாலைகளை உருவாக்கினர். மழையிலும் வெயிலிலும் புழுப்பூச்சிக்களுக்கு கடியுண்டு பசியிலும் பட்டினியிலும் நாளுக்கு பன்னிரண்டு மணி நேரம் வலுக்கட்டாயத்தில் உழைத்தார்கள். மலையகத்தமிழர் எனக்கூறப்படும் இவர்களே இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கிச்சுமந்தனர். பிரித்தானிய முதலாளிமாரின் கீழ் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் கடுமையாக உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்கள் தான். ஆனால், இலங்கையர்கள் இவர்களை கள்ளத்தோணி, வடக்கத்தியான், தோட்டக்காட்டான், பறத்தமிழன் என்றெல்லாம் பல வசைச்சொற்களைக் கூறி இழிவுபடுத்தி, இந்திய வம்சாவளித்தமிழரை நாட்டை விட்டுத் துரத்த வேண்டுமென எண்ணினார்கள்.
மலையகத்தமிழரின் சோக வரலாறு வெளித்தெரியாமல் புதையுண்டு போனது. இது இலங்கையர், இந்தியர் இரு தரப்பினராலும் பேசமறுக்கப்படும் சோகக்கதை. இவர்களது நடைப்பயணத்தின் போது பலர் இறந்து போயினர். தோணிகளில் அதிகம் பேரை ஏற்றிச்சென்றதால் பல பேரை கடல் காவுகொண்டது. இலங்கைக் கரையைச் சேர்வதற்கு முன்னாலேயே பலநூறு இந்தியத் தமிழர்கள் மாய்ந்து போயினர். இவர்களை அழைத்துவந்த "ஆதிலெட்சுமி" என்ற கப்பலொன்று நூற்றிருபது பேருடன் கடலில் மூழ்கிய சம்பவமும் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறுகிறது. வரும் வழியிலும் வந்து குடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான துயரங்களை எதிர்க்கொண்டனர். இவ்வாறு துயர்சுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் மலையகத்தமிழர் என்றும் இந்திய வம்சாவளித்தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். தமிழகத்திலிருந்து தமிழர்களுடன் தெலுங்கர், மலையாளிகளும் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சிறுபான்மையினராக இருந்த காரணத்தினால் அவர்களும் தமிழ்பேசக்கற்று தமிழராகவே உருமாறினர்.
உரிமையற்று வாழ்ந்த இவர்களுக்கு 1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வழங்கப்பட்டபோதிலும் பின்னரே கொண்டுவரப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் மற்றும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் ஆகிய பிரஜாவுரிமை சட்டங்களால் அவ்வுரிமையும் பறித்துக்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் இந்திய வம்சாவளித்தமிழர்கள் இந்தியாவிற்கே செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. ஒரு தொகையினர் விரும்பி வெளியேறினர். லட்சக்கணக்கானோர் வெளியேறிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். பலர் இந்தியாவிற்கே நாடு கடத்தப்பட்ட அவலமும் வரலாற்றில் இருக்கிறது.
இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின் பெருமளவு இந்தியத்தமிழரை இலங்கையிலிருந்து வெளியேற்ற இலங்கை அரசு முயற்சித்தது. இதன்படி 525,000 பேரை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இச்சமயம் இந்தியக்குடியுரிமை பெறுவோர், இலங்கைக்குடியுரிமை பெறுவோர், நாடற்றோர் என இவர்கள் மூன்றாகப் பாகுபடுத்தப்பட்டனர்.இதனை விரிவாக எடுத்து நோக்கின்,
1948 ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானியர் வெளியேறிய பின்னர் சிங்களதேசியவாதிகள் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கே திருப்பியனுப்பிவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அதனை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்மையாக எதிர்த்தபோதிலும் 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி இலங்கை குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட தினத்தின் முன்னர் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவரது இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் இலங்கைக் குடியுரிமைக்கு உரித்துடையவரென்று வரையறுக்கப்பட்டது. போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பலர் “நாடற்றவர்” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1958ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமை சட்டத்தின் பின்னரே "நாடற்றோர்" என்ற பதம் நீங்கி, தோட்டப்புற மக்களும் வாக்குரிமை பெற்று இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றனர்.
இன்னும் மலையக வரலாற்றையும் இந்திய வம்சாவளித்தமிழரின் சோகக்கதையையும் கூறமுற்படின் பலநூறு பக்கங்களில் இவர்களின் வலிகள் பதிந்துகொண்டே செல்லும். கல்லுமுள்ளாகவும் காடுமேடாகவும் குன்றும் குழியுமாக கிடந்த மலைநாட்டை தங்கள் வியர்வையால் செதுக்கி அழகிய வளமிகு பூமியென மாற்றியதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையையும் பொருளாதாரத்தையும் விருத்தி செய்து கொடுத்த எமது முன்னோர்களாகிய இந்திய வம்சாவளித் தமிழர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களைக் கடந்தனர் என்பது சொல்லொணாத்துயராகும். ஆயினும், இருபத்தோராம் நூற்றாண்டில் இன்றுவரை இந்நிலைமை முற்று முழுதாக மாறவில்லை என்பது மிகவும் கசப்பான உண்மைதான்.
"மலையகத்தமிழ் இலக்கியம்" என்ற பரப்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய இடம்பிடித்துள்ளமை இவர்களின் வெற்றியாகும்.
இப்படிப்பட்ட இவர்களை ஏன் இந்த உலகமே மறந்து போனது! மலையக இளைஞர்கள் ஊடகத்துறைத் தொழிலுக்கு விண்ணப்பித்தால் நேர்முகத்தேர்வில் இந்தியத்தமிழ் பேசுவதால் நிராகரிக்கப்படும் கொடுமை இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. கூலிகளாக வந்தவருக்கு படிப்பெதற்கு? என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அவலமும் இவர்களின் துயரில் இழையோடத்தான் செய்கிறது. அன்று பிள்ளை பராமரிப்புக்காக இருந்த கொட்டகைகளான "பிள்ளைக்காம்பராக்கள்" தான் இன்றைய தோட்டப்புற பாடசாலைகள். இலங்கையின் கல்வி இலவசக்கல்விமுறை எனினும் அது சமத்துவக்கல்வியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதற்கு இத்தோட்டப்புற பாடசாலைகளே சான்றாகும்.
மலையகத்தின் நூற்றாண்டைக் கடந்த பாடசாலைகள் என்று அவதானித்தால் நுவரெலியா திரித்துவக்கல்லூரி( சுமார் 175ஆண்டுகள்), இறக்குவானை பரியோவான் கல்லூரி(சுமார் 130ஆண்டுகள்), ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி-(மெதடிஸ்ட் கல்லூரி)(சுமார் 125 ஆண்டுகள்), நுவரெலியா சென்சேவியர் கல்லூரி(சுமார் 97 ஆண்டுகள்) ஆகிய பாடசாலைகள் இடம்பெறுகின்றன. இன்றைய மலையக பாடசாலைகள் பலரின் முயற்சியாலும் உருப்பெற்று இன்று அரசாங்க பாடசாலைகளாக பரிணமித்துள்ளன.
மலையகம் என்பது கல்விக்கு பின்நிற்கும், கல்வியில் பின்தங்கிய சமூகமென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொரு விடயமாகும். நிர்வாக உள்கட்டமைப்புக்கள் மலையகக் கல்வியை வரலாற்றில் பின்தள்ளியிருக்கின்றது என்பதே நிதர்சனம். இன்றைய மலையக மக்களின் வளர்ச்சி நிச்சயம் எதிர்கால கல்வி வரலாற்றிலும் இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
-ஹட்டன் பிரவீனா.
0 Comments